-பாசமற்றுப் போகின்றாய்..-


வீறு கொண்டு செல்கின்றாய்
விசக் கிருமியாய்.......
ஈட்டி கொண்டு இடித்து விட்டு
என் இதயத்தில்.....
பாசமலர் பெற்ற பெண்ணா..?
பாசமற்றுப் போகின்றாய்.
நேசமலர் பெற்ற பெண்ணா....?
நெஞ்சைக் கிழித்து பார்க்கின்றாய்.........
கனவில் மணம் முடித்து
கண்ணீரால் வாழ்த்துகின்றேன்.
கண்மணியே....!நீ இன்று
கண்கலங்கச் செய்வதென்ன.....
கசாப்புக் கடைக்காரனும்
கத்தியெறிந்து வெட்ட மாட்டான்.
காதலித்த நீ இன்று
கத்தியின்றி கிழித்திட்டையே...!
நெரிஞ்சி முள்ளுக் குத்தியதா..?
என் நெஞ்சினிலே...
நெருப்பாய் எரிகின்றதே....
என் கண்ணுக்குள்ளே...!
பெண்ணே...!
இறந்தும் துடிக்கும் என் இதயம்
மீண்டும் வருமா எனக்கோர் உதயம்.