பிரிவின் செய்தி கேட்டு
கிழிந்து போன நெஞ்சத்துள்
எரிகின்றது நெருப்பு,
அவள் மறந்து போன தவிப்பால்...
சொல்லியும் கேட்காமல்
இருள்கிறது விழிகள்
மழையே இல்லாமல்
நனைகிறது இமைகள்.
இதயத்தில் உள்ள பள்ளம் -அவள்
எழுந்து சென்றதைச் சொல்லும்
அடிக்கடி உள்ளம்
சிரித்துக் கொண்டே கொல்லும்.
தனிமையில் அவள் நினைவு
தலையணை நனைக்க
உடைபட்ட மனம்
சிறையிருக்க துடிக்கின்றது.
எதிர்காலம் கேள்விக் குறியாய்
நிகழ்காலம் தடுமாற
இறந்தகாலம் மட்டும்
மீண்டும் மீண்டும் உயிர்க்கிறது உணர்புகளால் .
நினைத்த மனம்
மறக்காமல் தவிக்கையில்
மணந்த மனம் ஏனோ
மரத்து நிக்கின்றது,
மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டு.