பிரியமாய் இருந்தவனே..!
பிரிந்து ஏன் சென்றாய்..?
புரியத்தான் முடியல்லையே
புன்னாய்ப் போன மனசாலே....

உயிரே.. என்று உறவாடி
உயிரயே இப்போ உறிஞ்சிறையே..
காதல் நோய் பிடித்த பின்பு
எங்கே போய் மருந்தேடுப்பேன்..?

காயப்படுத்தி சென்று விட்டாய்
கானல் நீர்தான் வடிகிறதே
சிந்தனையில் வாடுகிறேன்
சிறைச்சாலைக் கைதியாக..

சீதனமாய் என்ன வேண்டும்
சிறையெடுக்க வந்து விடு
சீர்வரிசை செய்து செய்து
சீரழிந்தான் எங்கப்பன்.

மதில் மேல் பூனையாக
மாரடிக்குது உன் மனசி
தூண்டிலில் சிக்கிய மீனாக
துடிக்கிறது என் உயிரு...