- ஜீவன் வாடுது -

உன் பாதம் பட்ட எறும்பு கூட
ஆடிப்பாடி ஓடுதடி,.
உன் பார்வை பட்ட என் முகத்தில்
தாடி நீண்டு வளருதடி.

தாலி கட்ட நினைக்கையிலே
வேலி தாண்டி சென்றவளே......!
கரம் பிடிக்க வருகையிலே
என் கையுதறிப் போனாயே......

நாம் போன பாதையிலே
நீ தொட்ட பூக்கலெல்லாம்
முகம் சுருண்டு தொங்குதடி,
தென்றல் வந்து தடவமுன்னே
உன்வரவைத் தேடுதடி.

மணம் முடித்து போன பின்பும்
என் மனம் மாற மறுக்குதடி,
உன் மறுஜென்மம் வேண்டி
என் ஜீவன் வாடுதடி.