-புரிந்து கொள் -

பெண்ணே...!
மார்போடு புத்தகம் மறைத்து செல்கையிலே,
மனதுக்குள் உள்ளேனென 
மாராப்பு போட்டேன் - நீ
மறைத்து செல்வது 
இன்னொருத்தனையெனத் தெரியாமலே...

பதுங்கிப் பதுங்கி போகையிலே
பாசமென நினைத்திருந்தேன்,
புதைகுழி வெட்டத்தான் - நீ
பூமி பார்த்து நடந்ததை உணராமல்,
விருப்பம் சொன்ன வேளை
நீ...
செருப்பால் அடிப்பேன் என்றபோதே...
செத்து விட்டேன் நான்.
செத்த பின்னும் அலைகின்றேன்
பித்து பிடித்து உன் பின்னால்.

பெண்ணே...!
புலம்புகின்றேன் நானொருத்தன்,
சுடுகாட்டில்
சூடுதாங்க முடியாது 
எழுந்து வந்த பிணமாக.

ஆவிகள் உலாவுதென்று
சொன்னார்கள் பெரியோர்கள்,
பொய்..............
ஆசைகள்தான் உலாவுகிறது,
புரிந்து கொள் - நீயும்.