... முடிவிலிப் பயணம் ...

பயணங்கள் தொடங்க முன்பே
பாதைகள் ஏன் முடிகின்றது...?
பக்கங்களைப் புரட்டமுன்பே,
கதைகள் ஏன் மடிகின்றது...?
சிறுகதையா..?
விடுகதையா..?
தொடக்கமின்றி முடிவதுதானா..? காதல்....
நெருப்பில்லாமல் புகை வரும்
நீர் வீழ்ச்சியருகில் அதுவும் நிஜம்.

விலக்க முடியாத போர்வைக்குள்
வியர்வை வந்தும் கொட்டும்.
விலகிப் போன காதலின்
நினைவுகள் வந்து முட்டும்.
கண்களைப் படைத்தவன்
கண்ணீரையும் ஏன் படைத்தான்..?
பெண்களைப் படைத்தவன்
ஆசையை ஏன் விதைத்தான்...?

சந்திரனும் சூரியனும்
சண்டையிட்டு கொண்டதில்லை.
கிரகணம் வந்து வந்து
சந்திரனைக் கொன்றதில்லை.
நினைவுகள் வந்து வந்து
என்னைஇங்கு கொல்வதனால்
நிம்மதியைத் தேடித்தேடி
நான் நிலையாக இருந்ததில்லை.

தொடரும் பயணங்கள்
தொடக்கத்தில் முடிவதுண்டு,
தொட்டுவிட்ட காதலும்
விட்டுவிட்டு போவதுண்டு