-பாதை மாறிச் சென்றதேனோ?-

பெண்ணே...!

ரவிவர்மன் தீட்டிய தூரிகையை
எறிந்த இடத்தில் பிறந்தவளா ?- நீ
பிரமன் கலந்த கலவையில்
கை நழுவி விழுந்தவளா..?

விடை தேடியலையும் விழிகளுக்கு
வினாக்கள் என்னவென்று புரியவில்லை.
வெள்ளைத்தாழில் கொள்ளை கொண்ட
விம்பமென்ன தெரியவில்லை.

இறுக்கிப் பூட்டிய இதயத்துள்
இருக்கை போட்டுக் கொடுத்த பின்பு
காற்றுப் புகா இடைவெளியால்
நழுவிச் சென்ற மாயமென்ன.?

என் கண்ணிரண்டும் நீர் சொரிய
இதயம் நின்று பற்றியெரிய
பாவனைகள் மாற்றி நீயும்
பாதை மாறிச் சென்றதேனா?