- மறந்து சென்றவள் -

மறந்து விட்டேன் உன்னை
மறந்து விடு என்னை-என
மனம் திறந்து சொன்னவளே..!
மறைவாக இருக்கும் மனதை
ஏனடி
திறந்து பார்க்க மறந்து விட்டாய்?

மாராப்புச் சேலைக்குள்
மறைந்திருப்பதா மனம்?
வளர்ந்த பின்பும் காதலை
வதைப்பதுதானா உந்தன் குணம்?

வாடகையின்றி
உன் வாழ்கைக்காக
துடித்த என்னை
வார்த்தையெனும் வாளால்
வீசி விட்டுச் செல்கின்றாய்........
சென்றாலும் பெண்ணே..!
செல்வாக்காய் இரு
என் சொல்வாக்கு பலிக்கட்டும்