- பிரிவின் பிரியம் -



கறுப்பு நிலா வெளிச்சம் போட்டு
காதலர்கள் ஒன்றிணைய
கவியாக நுழைந்த மனம்
காணாமல் செல்கின்றது.

காதல் றோட்டில் கைபிடித்து
காதலராய் பயணித்த
ஞாபகங்கள் நிலைத்திருக்க
கண்ணீர்த் துளிகள் சுரக்கிறது.

நாக்கில் உருண்டு மலரும்
வார்த்தைகள்தான்
மனவலியைப் பெருக்குகின்றது.
நாளும் உந்தன் நினைவு
என்னுள் மெழுகாக உருகுகின்றது.

நீ உச்சரித்த
ஒவ்வொரு வார்த்தைகளும் உயிரை
முள்ளுமுள்ளாய் குத்தினாலும்
உன்னாலே என் மனம்
விறையுண்டு இருக்கின்றது.

வேணாமென்று சொல்லி
கையுதறிப் போனாலும்
வேண்டுமென்றே கண்கள்
உன்
முகம் காணத் தவிக்கின்றது.